சென்னை மெட்ரோ ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: பெரும் பரபரப்பு

சென்னை மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் இணைந்து ஒரு சங்கம் தொடங்கியதாக தெரிகிறது. இதனையடுத்து சங்கம் தொடங்க காரணமாக இருந்த 8 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் அந்த 8 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து கோயம்பேடு மெட்ரோ தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply