shadow

சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் நாளை விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக சென்னையின் பல பகுதிகள் மழை காரணமாக சாலையெங்கும் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நிலையில் இன்று (31/10/2017) சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என சென்னை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் இன்று நடைபெறும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்று கூறப்படுகிறது

Leave a Reply