சென்னை மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை

சென்னையில் அடுத்த சில மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், எழும்பூர், தி.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது

இதனை அடுத்து சற்றுமுன் சென்னை வானொலி நிலையம் அறிவித்த செய்தி குறிப்பு ஒன்றில், ‘சென்னையில் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு கனமழை பெய்யும் என்றும் அவசியம் இருந்தால் மட்டுமே பொதுமக்கள் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது

இன்று ஞாயிறு என்பதால் பள்ளி, கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் சாலைகள் வெறிச்சோடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply