shadow

சென்னை கொண்டு வரப்பட்டான் தஷ்வந்த்: இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

பெற்ற தாயை நகைக்காகவும், சிறுமி ஹாசினியை பாலியலுக்காகவும் கொடூரமாக கொலை செய்த தஷ்வந்த், சமீபத்தில் மும்பையில் பிடிபட்டு பின்னர் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி, பின்னர் மீண்டும் பிடிபட்டான்.

இந்த நிலையில் மீண்டும் தப்பிவிடாமல் இருக்க சங்கிலியால் கட்டப்பட்டு பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். இந்த நிலையில் இன்று அவன் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தஷ்வந்த் நேற்று இரவு முழுவதும் குன்றத்தூர் காவல்நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன்தங்க வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வ் எளிவந்துள்ளது.

Leave a Reply