நடிகர் சூர்யா கடந்த சில நாட்களாக நீட் தேர்வு குறித்த அறிக்கையால் ஊடகங்களின் தலைப்பு செய்திகளில் இடம்பெற்று வருகிறார்.
மேலும் அவர் நீதிமன்றம், நீதிபதிகள் குறித்த ஒரு கருத்தும் பெரும் சர்ச்சையானது. இருப்பினும் அவர் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது சூர்யா நீதித்துறை குறித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
இந்திய நீதித்துறையின் பெருந்தன்மை எனக்கு நிறைவை தருகிறது. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பு உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை காக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறைதான். சென்னை ஐகோர்ட் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாழ்மையுடன், பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
— Suriya Sivakumar (@Suriya_offl) September 18, 2020
Leave a Reply
You must be logged in to post a comment.