சென்னை ஐகோர்ட்டில் திமுக மீண்டும் வழக்கு: உள்ளாட்சி தேர்தல் நடக்குமா?

உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பெட்டிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது

திமுகவின் வழக்கை டிசம்பர் 30ஆம் தேதி உயர்நீதிமன்றம் விசாரிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தேர்தல் ஆணையம், தமிழக அரசு இந்த மனுவுக்கு விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் குறித்து பல்வேறு வழக்குகளை திமுக தாக்கல் செய்துள்ள நிலையில் தற்போது இன்று முதல்கட்ட தேர்தல் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் திமுக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply