சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா ஏற்பு
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் என்றும் சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வந்த தஹில் ரமானியை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக முடிவு செய்த தஹில் ரமானி, ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பினார்.
இந்த ராஜினாமா கடிதம் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.