பரபரப்பு தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக தீவிரமாக இருந்ததால் கடந்த நான்கு மாதங்களாக மின் கணக்கீடு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நான்கு மாதங்கள் கழித்து மொத்தமாக மின் கணக்கீடு எடுக்கும்போது மின் கணக்கீட்டில் விதி மீறல் இருப்பதாக பலர் குற்றம் சாட்டினார்

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று விசாரணைக்கு வந்தபோது மின் கட்டண கணக்கீட்டில் எந்த விதிமீறல்களும் இல்லை என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது

ஊரடங்கில் வீட்டு உபயோகத்துக்கான மின் அளவு கணக்கீடு குறித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் இந்த தகவலை தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்கப்போகிறது என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply