சென்னை அருகே தனியார் பள்ளி வளாகத்தில் தீ விபத்து
சென்னை தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் புற்களில் பிடித்த தீ அருகே உள்ள தனியார் பள்ளிக்கு பரவியதாகவும், தீ விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
மேலும் இந்த தீவிபத்து குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்
Leave a Reply
You must be logged in to post a comment.