சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து திடீர் மாற்றம்: பொதுமக்கள் சிரமம்
சென்னை அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே திடீரென போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றூம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செவல் ஆகியோர் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
முதல்வர், துணை முதல்வர் ஆகியோர்களின் வருகையை ஒட்டி போக்குவரத்து போலீசார் அண்ணா சாலையில் சில இடங்களில் போக்குவரத்தை மாற்றினர். குறிப்பாக தாராபூர் டவர் அருகே அனைத்து வாகனங்களையும் திருப்பிவிட்டதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதே ஓபிஎஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதல்வராக இருந்தபோது எந்தவித போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் காரில் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.