கொரோனா கொடூரம்

சென்னையில் கடந்த 12 மணி நேரட்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த 24 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மட்டும் 5 பேர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேர்களும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர்களும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேர்களும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேர்களும், கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

ஏற்கனவே சென்னையில் கொரோனாவால் 37,070 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

Leave a Reply