shadow

சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: அதிர்ச்சி தகவல்

சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கொண்டுவரப்பட்ட நாய்க்கறியை ரயில்வே போலீஸ், அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர். இந்த நாய்க்கறி எதற்காக சென்னை கொண்டு வரப்பட்டது , இதனை விற்பவர் யார்? வாங்குபவர் யார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply