சென்னையில் 10 ரூபாய் சாப்பாடு: குவியும் பொதுமக்கள்
சென்னை சாலிகிராமத்தில் பத்து ரூபாய்க்கு அளவு சாப்பாடு வழங்கப்படுவதால் அந்த ஓட்டலை நோக்கி மக்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சிறிய ஓட்டலில் கூட சாப்பாடு 50 ரூபாய்க்கு குறைந்து கிடைக்காது. ஆனால் இந்த ’உழைப்பாளர் உணவகம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ஓட்டலில் பத்து ரூபாய்க்கு சாம்பார் ரசம் மோர் கூட்டு பொரியல் உடன் சாப்பாடு கிடைக்கிறது என்பது குறிப்பிடதக்கது. அளவு சாப்பாடு பத்தாது என்று நினைப்பவர்கள் ரூபாய் 30 கொடுத்து அளவில்லா சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினி அரசியலுக்கு வர உள்ளதால் இந்த பத்து ரூபாய் சாப்பாட்டைத்தான் மக்களுக்காக சேவை மனப்பான்மையில் கொடுத்து வருவதாகவும், இந்த ஓட்டலின் உரிமையாளர் வீரபாகு அவர்கள் தெரிவித்துள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.