சென்னையில் விடிய விடிய மழை: பொதுமக்கள் அவஸ்தை
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை கடந்த மூன்று நாட்களாக பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையின் கிண்டி, கோடம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், எழும்பூா், ஆயிரம் விளக்கு, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முழுவதும் தொடா்ந்து கனமழை பெய்து வந்ததால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
மழை காரணமாக இன்று சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் அறிவித்துள்ளார் என்பது தெரிந்ததே/.
Leave a Reply
You must be logged in to post a comment.