shadow

சென்னையின் பல பகுதிகளில் நேற்று இரவு ஆரம்பித்த மழை விடிய விடிய பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சென்னையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று இரவு தொடங்கிய மழை சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய சாரல் பெய்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

குறிப்பாக தேனாம்பேட்டை அண்ணாசாலையில் சைதாப்பேட்டை தி நகர் மைலாப்பூர் உள்பட பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருப்பது அடுத்து தட்பவெட்பநிலை இதமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்