சென்னையில் ரயில் பிளாட்பார்ம் டிக்கெட் திடீர் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10-ல் இருந்து ரூ.15-ஆக உயர்த்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் இந்த விலை உயர்வு ஏப்ரல், மே, ஜுன் ஆகிய 3 மாதங்கள் மட்டும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கோடை விடுமுறையில் வெளியூர் செல்பவர்களால் ரயில் நிலையம் பரபரப்பாக இருக்கும் என்றும் இதனால் இதனால் தேவையில்லாதவர்கள் ரயில் நிலையத்துக்குள் நுழைவதை தடுப்பதற்காக ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாதங்கள் மட்டும் பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.15-ஆக விற்பனை செய்யப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிளாட்பார்ம் டிக்கெட் கவுன்ட்டர்கள் நடைமேடை எண் 1-லும் (வால்டாக்ஸ் சாலை அருகில்), 5-ம் எண் நுழைவு வாயில் அருகிலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply