கொரோனாவின் கொடூரம்

சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி கொரோனா தொற்றால் மரணம் அடைந்துள்ளது காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் கடந்த மாதம் 26ம் தேதி குருமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், அவருக்கு அங்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது

கொரோனாவால் மறைந்த 50 வயதான குருமூர்த்திக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply