சென்னையில் போராட்டம் செய்த தொழிற்சங்க தலைவர்கள் கைது
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களை பேருந்தில் ஏற்ற முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இன்றைய போராட்டம் காரணமாக வங்கி, போக்குவரத்து சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தும் பெரும்பாலான ஊழியர்கள் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.