shadow

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பைனான்ஸ் நிறுவனத்திற்கு முகமூடியுடன் நுழைந்த 8 பேர் அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு 30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்

வடபழனியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்திற்குள் நுழைந்து ஊழியர்களை கட்டிப்போட்டு 30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

வடபழனி திருநகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் ஓசோன் கேபிடல் என்ற பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனத்தை நடத்தி வரும் அவர், பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த பைனான்ஸ் நிறுவனத்திற்கு முகமூடியுடன் நுழைந்த 8 பேர் அங்குள்ள ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு 30 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்போது, எதிர் வீட்டில் இருந்த சரவணன் ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த கொள்ளையர்களை விரட்டி சென்ற நிலையில், சையது ரியாஸ் என்பவர் பிடிப்பட்டார்.