சென்னையில் நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்

சென்னையில் நாளை திமுக எம்.பிக்கள் கூட்டப்படவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது,. இந்த கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை கூடுவதாகவும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் புதிய திமுக எம்.பிக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் வரும் ஐந்து ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply