சென்னை மாநகராட்சியின் சார்பில் சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை முகாம்கள் இன்று முதல் நடக்கும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு, 66 ஆயிரம் பேர்களுக்கு இந்த பரிசோதனை முகாம்களை நடத்த மாநகராட்சி திட்டம் போட்டுள்ளது. இந்த முகாம்களை இன்று சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி இன்று காலை 10 மணியளவில் திரு.வி.க. மண்டலம் கேசப்பிள்ளை பூங்காவில் தொடங்கி வைக்கிறார்.
பிப்ரவரி 21ஆம் தேதி வரை இந்த முகாம்கள் நடைபெறும் என்றும், மேற்கண்ட இருவித நோய்கள் உள்ளவர்கள் இந்த முகாம்களில் தங்கள் உடல்நிலையை பரிசோதனை செய்து பயன்பெறுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த முகாம்களை சென்னை மாநகராட்சி பொது சுகாதாதத்துறையும், டாக்டர் மோகன்ஸ் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.