சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதல் மழை!

சென்னையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சென்னை கிண்டி, அசோக் நகர், மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி, வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, கே.கே.நகர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் இன்னும் சிறிது நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என தெரிகிறது

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என் ஏற்கனவே வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply