shadow

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமெரிக்கர் திடீர் மயக்கம்@

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவ ஒருவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மயக்கம் அடைந்த அமெரிக்கரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

செண்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்றிரவு 9 மணியளவில் திடீரென மயங்கி விழுந்த அமெரிக்கர் ஒருவரை மீட்ட ரயில்வே போலீசார், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்தனர். அமெரிக்க நபரை பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த வாஷிங்டன் கிளென் என்பதும் இங்குள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தொண்டு செய்ய வந்தார் என்பதும் தெரியவந்தது.

Leave a Reply