shadow

செட் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது ?

தமிழ்நாடு மாநில உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு (செட் தேர்வு )முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த தேர்வினை எழுதியவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் கோடைகானல் அன்னை தெரசா பல்கலைகழகம் வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டிற்குகான செட்(தமிழ்நாடு மாநில தகுதி தேர்வு) தேர்வானது ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு பாடப்பிரிவுகளை சார்ந்த முதுகலை பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கானோர் எழுதியதாக கூறப்படுகிறது.

இந்த தேர்வு வினாதாளுக்கான விடைக்குறிப்புகள் மே மாதம் 15-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தநிலையில் தேர்வு முடிவுக்கள் எப்போது வெளியாகும் என்ற ஏதிர்பார்ப்பில் இந்த தேர்வை எழுதியவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

செட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் பி.எச் டி ஆராய்ச்சி படிப்பு மற்றும் உதவிபேராசிரியர் பணியிடங்களில் சேர முடியும். தற்போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் பி.எச் டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது. செட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்த தேர்வெழுதிய மாணவர் சபரிீ கூறும்போது,” காமர்ஸ் பிரிவில் நான் இந்த தேர்வை எழுதியுள்ளேன். இந்த தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. செட் தேர்வுக்காக அன்னை தெரசா பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள போனுக்கு கால் செய்தால் யாரும் எடுக்கவில்லை. இரண்டு கல்லூரிகளில் காமர்ஸ் பணிகான உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியில் சேர வேண்டும் என்றால் செட் , நெட் அல்லது பி.எச்.டி முடித்திருக்க வேண்டும். ஆனால் செட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் அந்த பணிக்கு என்னால் விண்ணப்பிக்க இயலவில்லை” என்று கூறினார்.

Leave a Reply