சூப்பரான கொத்தமல்லி சூப் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :
சீரகம் – கால் கப்
தனியா – கால் கப்
மிளகு – 2 டீஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
எலுமிச்சை சாறு – சிறிதளவு
தண்ணீர் -2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கு
செய்முறை :
இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சீரகம், தனியா, மிளகு ஆகிய மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும். இந்த கலவையுடன் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த தண்ணீர் கலவையுடன் உப்பு சேர்த்து அடுப்பில் கொதிக்கவைக்க வேண்டும்.
நன்றாக கொதித்து பக்குவம் வந்ததும் இறக்கி, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும்.
Leave a Reply
You must be logged in to post a comment.