சுஷ்மாவின் ஐநா பேச்சுக்கு சீன ஊடகங்கள் புலம்பல்
பாகிஸ்தான் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சமீபத்தில் ஐநாவில் கடுமையாக பேசியதை சீன ஊடகங்கள் புலம்பலுடன் செய்தி வெளியிட்டு வருகின்றன.
சமீபத்தில் ஐநாவில் பேசிய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ‘இந்தியா ஐ.டி., துறையில் உலகிற்கு சவால் விட்டு வருவதாகவும், பாக்., பயங்கரவாதத்திற்கு தலைமையிடமாக இருப்பதாவும், இந்தியாவில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், அறிஞர்களை உருவாக்கி வருவதாகவும், பாக்., தனது சொந்தநாட்டு மக்களையே தீவரவாதிகளாக உருவாக்கி வருவதாகவும் கூறினார்.
இந்த பேச்சு குறித்து செய்தி வெளியிட்டுள்ள சீனாவின் முன்னணி ஊடகம் ஒன்று, ‘பாகிஸ்தானில் தீவிரவாதம் இருப்பது உண்மைதான் என்றாலும் பாகிஸ்தான் அரசே தீவிரவாதத்தை வளர்த்து வருவதாக இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது சரியானதல்ல என்று கூறியுள்ள அந்த ஊடகம், இந்தியா தனது அண்டை நாடுகளை பகைத்து கொண்டு அமெரிக்காவிடமும் பிரிட்டனுடனும் நட்பு கொண்டு வருவதாக கூறியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.