சுரங்கம் தோண்டும் பகுதியில் மழை: மீட்புப்பணி பாதிக்கப்படும் அபாயம்
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க பாறைகளை உடைக்கும் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென மீட்புப்பணி நடைபெறும் நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப்பணிகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இருப்பினும் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி நடைபெறும் இடத்தில் மழை பெய்து வரும் நிலையிலும், குழிகளை சுற்றி மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர். மழையினால் மீட்புப்பணி பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தை சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணி 11 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருகிறது. ஒரு ஆள் இறங்குமளவிற்கு 1 மீட்டர் அகலத்திற்கு குழி தோண்டப்பட்டு வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.