சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள்: சென்னை ஐகோர்ட்
இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்ட நிலையில் இன்னும் பலர் ஹெல்மெட் அணியாமல்தான் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இதுகுரித்த வழக்கு ஒன்றில் கருத்து கூறிய சென்னை ஐகோர்ட், ‘சுய ஒழுக்கத்துடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், நீதிமன்றங்கள் உத்தரவுகளை மட்டும் பிறப்பிப்பதால் எந்த பயனும் இல்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை கண்காணிக்க போக்குவரத்து காவல்துறையில் போதுமான காவலர்கள் இருக்கிறார்களா? என்று தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.