சுப்ரீம் கோர்ட் 6 நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் பன்றிக்காய்ச்சல்! சதியா?

டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகளாக பணிபுரிந்து கொண்டிருக்கும் 6 பேருக்கு ஒரே நேரத்தில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டதுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இதனால் இந்த 6 நீதிபதிகளும் விடுமுறையில் சென்றுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 33 நீதிபதிகள் உள்ளனர், இதில் 6 பேர்களுக்கு பன்றிக்காய்ச்சல் உள்ளது. ஆனால் யாருக்கு எல்லாம் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகவில்லை. நீதிபதிகளின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த 6 முக்கியமான நீதிபதிகள் விடுப்பில் சென்று இருக்கிறார்கள். இவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுப்ரீம் கோர்ட்டிற்கு இன்று வந்த நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பலர் இன்று மாஸ்க் அணிந்தபடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply