சுபஸ்ரீ பலியான வழக்கு: தலைமைறைவாக இருந்த அதிமுக பிரமுகர் கைது!

அதிமுக பிரமுகர் ஜெயகோபால் என்பவர் வைத்த பேனரால் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான நிலையில் அவரின் மரணத்திற்கு காரணமான ஜெயகோபாலை விரைவில் கைது செய்ய வேண்டும் என நீதிமன்றம் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது

இதனை அடுத்து ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் பேனர் விபத்தில் சுபஸ்ரீ உயிர் இழந்த வழக்கில் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரிடம் போலீசார் விரைவில் விசாரணை செய்ய உள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை என்ற பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் ஜெயகோபால் தலைமறைவாக இருந்ததாகவும் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் அவரை கைது செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன

Leave a Reply