சுபஸ்ரீ சிசிடிவி பலியான காட்சி: இணையதளங்களில் வைரல்

பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான சம்பவம் நேற்றிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

காவல்துறையினர்களை நீதிபதிகள் கேள்விகளால் துளைத்து எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் சுபஸ்ரீ பலியான வீடியோ காட்சியை தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

சுபஸ்ரீ சாலை விதிப்படி ஹெல்மெட் அணிந்து மிதமான வேகத்திலேயே சென்று கொண்டிருக்கிறார். ஆனால் திடீரென பேனர் கீழே விழுந்ததால் நிலை தடுமாறி அவர் கீழே விழுவதும், பின்னால் வந்த லாரி டிரைவர் பிரேக் போட முயன்று முடியாமல் இந்த விபத்து ஏற்படுவதும் இந்த சிசிடிவி காட்சியில் இருந்து தெரிய வருகிறது இதனை அடுத்து எந்தவித தவறும் செய்யாத சுபஸ்ரீ பேனர் விழுந்ததால் மட்டுமே பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Tweet thanks to News18 Tamilnadu

 

Leave a Reply