சுஜித் மறைவு எதிரொலி: லதா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு

2 வயது சுஜித்தின் இழப்பை இன்னும் தமிழக மக்களால் ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை. எத்தனை விஞ்ஞானம் இருந்தும் 86 அடியில் இருக்கும் ஒரு குழந்தையை மீட்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அனைவர் மனதிலும் எழுந்துள்ளது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினி அவர்கள் இந்த துயர சம்பவம் குறித்து கூறியபோது, இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு என்றும், சுஜித்தின் நிலை குறித்து ரஜினிகாந்த என்னிடம் கேட்டவாறே இருந்தார் என்றும் கூறினார்.

மேலும் சுஜித்தின் இறுதி நேர தவிப்பை வார்த்தைகளில் விளக்க முடியாது என்றும், குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரம் செயல்படும் குழுவை அமைக்கவுள்ளோம் என்றும் இதற்காக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் லதா ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்தார்.

Leave a Reply