shadow

இன்று ஒருசில சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதாக பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தீபாவளி விடுமுறைக்காக வெளியூர் சென்றவர்கள் இன்று சென்னை திரும்பி வருகின்றனர். இதனை அடுத்து மதுராந்தகம் சுங்கச்சாவடி அருகே கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது

ஒரு சில சுங்கச்சாவடி ஊழியர்கள் மட்டுமே இருந்ததால் நீண்ட வரிசையில் நின்று வாகனங்களுக்கு சுங்க கட்டணம் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று அதை அடுத்து வேறு வழியின்றி வாகன நெரிசல் காரணமாக கட்டணமின்றி இலவசமாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது

இதன் காரணமாக மதுராந்தகம் சுங்கச்சாவடி உள்பட ஒருசில சுங்கச்சாவடிகளில் கட்டணமின்றி இலவசமாக வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் பல சுங்கச்சாவடிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது