shadow

தமிழகத்தில், மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலைகளில் உள்ள 14 சுங்கச்சாவடிகளில் வரும் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது என தேசியநெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி வருடத்திற்கு ஒருமுறை சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம் தான் என்று இந்த கட்டண உயர்வுக்கு தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்

சுங்க கட்டணம் உயர்வு காரணமாக லாரி வாடகை உயர்ந்துள்ளது என்றும் இதனால் அத்தியாவசிய அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்து வருகின்றனர்