சீமான், திமுக எம்.எல்.ஏ இருவருக்கும் சம்மன்: பெரும் பரபரப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரித்து வரும் ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. நாளை தூத்துக்குடியில் உள்ள ஆணைய அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அதேபோல் தூத்துக்குடி திமுக எம்.எல்.ஏவும், திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான் கீதா ஜீவனுக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், கீதாஜீவன் வரும் வாரத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரனை செய்ய ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் நியமனம் செய்யப்பட்டார் என்பதும், அவர் தனது விசாரணை அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply