shadow

சீன எல்லைக்குள் இந்திய ட்ரோன் நுழைந்ததா?

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே கடந்த சில வருடங்களாக எல்லைப்பிரச்சனை நிலவி வரும் நிலையில், சீனாவின் வான் எல்லைக்குள் இந்தியாவின் ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானம்) நுழைந்து விபத்துக்குள்ளானதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து சீனாவின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: “சீன வான் எல்லைக்குள் இந்திய ட்ரோன் நுழைந்து சீனாவின் இறையான்மையை மீறுகிறது” என்று குற்றம் சாட்டியுள்ளது. எனினும், எந்த இடத்தில் இந்திய ட்ரோன் நுழைந்தது என்ற தகவலை சீன ராணுவம் அளிக்கவில்லை.

சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியாவின் தரப்பில் பதில் எதுவும் தற்போது வரை அளிக்கப்படவில்லை.

Leave a Reply