சீனாவில் இன்றுமுதல் உலகின் அதிவேக புல்லட் ரயில் இயக்கம்
புல்லட் ரயிலுக்கு இந்தியாவில் இப்போதுதான் அடிக்கலே நாட்டப்பட்டுள்ளது. இன்னும் ஐந்து வருடங்களில் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீனா உலகின் அதிவேகமான புல்லட் ரயிலை இயக்கியுள்ளது. பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே இன்று முதல் இயங்கும் அதிவேக புல்லட் ரயில் 350 முதல் 400 கிமீ வேகத்தில் செல்லுமாம். உதாரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ஒன்றரை மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்று அர்த்தம்
பீஜிங் மற்றும் ஷாங்காய் இடையேயுள்ள 1250 கிமீ தூரத்தை இந்த ரயில் நான்கரை மணி நேரத்தில் கடந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.