சிவகெங்கையை அடுத்து மேலும் இரு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வரும் நிலையில் மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி இன்று காலை முதல் பொதுமக்கள் தொலைக்காட்சிகளில் செய்திகளை பார்த்து வந்தனர்.

எதிர்பார்த்ததுபோலவே சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
என அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவித்துள்ள மேலும் சற்றுமுன் மேலும் இரு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியரும், கோவை மாவட்டத்திலும் இன்று கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ராசாமணி அவர்களும் அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட நிலை குறித்து இன்னும் சில நிமிடங்களில் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply