shadow

சிவகார்த்திகேயன் – அர்ஜூன் இணையும் படத்தின் படப்பிடிப்பு எப்போது?

சிவகார்த்திகேயன் , நயன்தாரா நடித்து வந்த ‘Mr.லோக்கல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் இயக்குனர் ராஜேஷ் எம் முடித்துவிட்டு இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை அவர் தொடங்கியுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய 15வது படத்தை இரும்புத்திரை’ இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 15ஆம் தேதி முதல் தொடங்கவிருப்பதாக கூற்ப்படுகிறது. சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

சிவகார்த்திகேயனுடன் ஆக்சன்கிங் அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை 24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது

Leave a Reply