சிலைக் கடத்தல் வழக்கு: சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு ரத்து
சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி மகாதேவன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு செயல்படுவார் என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறுவதை அவரது பதவிக்கு அக்சய்குமார் சிங் என்பவரை நியமனம் செய்திருந்த நிலையில் இன்று நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தது மகிழ்ச்சி அளிப்பாதாகவும், சிலை கடத்தல் வழக்குகளில் இதுவரை என்னுடன் இருந்த குழுவே தொடரும் என்றும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க முயற்சிப்பேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.