சிலிண்டர் வெடித்து கணவர் பலி: மனைவி, மகள் படுகாயம்
வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து கணவர் பலியாகியும், அவருடைய மனைவி, மகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது
ஐதராபாத்தை சேர்ந்த சுபானி மற்றும் ஷர்மிளா தம்பதிக்கு ஃபிர்டோஸ் என்ற 3 வயது மகள் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் இருந்த வீட்டில் கேஸ் கசிந்ததை அடுத்து சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுபானி, ஷர்மிளா மற்றும் அவர்களது மகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி சுபானி மரணம் அடைய ஷர்மிளாவும் ஃபிர்டோஸூம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.