shadow

கேரள மாநில விவசாய துறை சார்பில் நடைப்பெற்ற விவசாய தின விழாவில் நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயிவிருது வழங்கப்பட்டுள்ளது.

80 மற்றும் 90 களில் மலையாள சினிமாவில்  சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ஜெயராம். இப்போது முக்கியமான ரோல்கள், வில்லன் கதாபாத்திரம், துணை நடிகர் ரோல்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  தமிழிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லை கதையை பொறுத்து சில படங்களில் ஹீரோவாகவும் ஜெயராம் நடிக்கிறார். இவரது மகன் காளிதாஸூம் இப்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் காளிதாஸ் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்த ‘பேப்பர் ராக்கெட்’ சீரீஸ் பாராட்டுக்களை வாரி குவித்துள்ளது.

விஜய் டிவி கொடுத்த அதிர்ச்சி.. அழுது தீர்த்த ஆங்கர் பிரியங்கா! நடிகர் ஜெயராம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு பண்ணையை நடத்தி வருகிறார்..

இந்த பண்ணைக்கு ஆனந்த் பண்ணை என்று பெயரும் வைத்துள்ளார். சுமார் 8 ஏக்கர் நிலத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பசுக்களை ஜெயராம் தனது பண்ணையில் வளர்த்து வருகிறார். இதுக் குறித்த பல செய்திகள், பேட்டிகள் இணையத்திலும் வைரலாகியுள்ளன,. இந்நிலையில், ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் கவுரவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்! கேரள மாநில விவசாய துறை சார்பில் திருவனந்தபுரத்தில் 2 தினங்களுக்கு முன்பு விவசாய தின விழா நடைபெற்றது. இதில் சிறந்த விவசாயி என்ற விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஜெயராம் செய்து வரும் விவசாய பணிகளுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. இதில் பேசிய நடிகர் ஜெயராம் ”பத்ம ஸ்ரீ விருதை விட விவசாயி விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என கூறியுள்ளார்.