சிம்ரனும் திரிஷாவும் சேர்ந்த கலவை தான் இந்த நடிகை: எஸ் ஜே சூர்யா
எஸ்ஜே சூர்யா நடித்த ’மான்ஸ்டர்’ என்ற திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது அடுத்து அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான ’பொம்மை’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி ப்ரியா பவானிசங்கர் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர் நடித்தார் என்று சொல்வதை விட பாதி திரிஷாவும், பாதி சிம்ரனும் நடித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும் அவரது நடிப்பில் இருவரது சாயலில் இருந்தது என்று கூறியுள்ளார்
ஏற்கனவே எஸ்ஜே சூர்யா மற்றும் பிரியா பவானிசங்கர் ஆகிய இருவரும் ’மான்ஸ்டர்’ என்ற படத்தில் நடித்து உள்ளனர் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
’மான்ஸ்டர்’ , எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானிசங்கர், பொம்மை,
Leave a Reply
You must be logged in to post a comment.