சிம்கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிப்பு: மத்திய அரசு
வங்கி கணக்கு, பான் எண், ரேசன் கார்டு உள்பட பல ஆவணங்கள் ஆதார் எண்ணுடன் ஏற்கனவே இணைக்கப்பட்ட நிலையில் தற்போது சிம்கார்டிலும் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வரும் 2018 ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்காவிட்டால் சிம் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது.
எனவே இன்னும் ஆறு மாதங்களே மீதமிருக்கும் நிலையில் அதற்குள் சிம்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகிறது. ஆதார் அட்டை இல்லாதவர்கள் உடனே இந்த ஆறு மாதத்திற்குள் புதிய ஆதார் அட்டை பெற்று சிம்கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.