சிப்பெட் தலைமையகம் மாற்றல் குறித்து மத்திய அமைச்சரின் முக்கிய அறிவிப்பு.
சமீபத்தில் சென்னை கிண்டியில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட இருப்பதாக மத்திய அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியானது. இதற்கு தமிழக அரசு, திமுக உள்பட பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ‘சிப்பெட்’ நிறுவனத்தின் தலைமையகம் டெல்லிக்கு மாற்றப்படாது என்றும், ஆமால் அதே சமயத்தில் மற்றொரு தலைமையகம் டெல்லியில் உருவாக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் அனந்தகுமார் மேலும் கூறியபோது, ‘சிப்பெட் நிறுவனத்தின் தலைமையகம் சென்னையில் இருந்து மாற்றப்படாது. அங்கேயே தொடர்ந்து செயல்படும். அதே சமயம், டெல்லியில் மற்றொரு தலைமையகம் அமைப்பதற்கான தேவை தற்போது ஏற்பட்டு உள்ளது. மேலும் ஒரு தலைமையகம் மட்டும் அல்லாமல், மாநிலங்களில் மண்டல தலைமையகங்களை தொடங்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது’ என்று கூறியுள்ளார்.
ஆனால் இப்போதைக்கு தமிழகத்தின் எதிர்ப்பை சமாளிக்கவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாகவும், டெல்லியில் புதிய அலுவலகம் ஆரம்பித்தால் நாளடைவில் சென்னையில் உள்ள தலைமையகத்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு விடும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.