600க்கு 600 மார்க் அள்ளிய மாணவி

இன்று வெளியாகி இருக்கும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவைச் சேர்ந்த மாணவி திவ்யான்ஷி ஜெயின் என்பவர் மொத்தமுள்ள 600 மார்க்கையும் எடுத்துள்ளார்.

எந்த ஒரு பாடத்திலும் ஒரு மார்க் கூட இவர் இழக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நவ்யூக் ராடியன்ஸ் சீனியர் பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவி, ஆங்கிலம், சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், இன்சூரன்ஸ் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களில் 100க்கு 100 மார்க் எடுத்துள்ளார்

தனது மார்க் குறித்து மாணவி திவ்யான்ஷி கூறியபோது, ‘இது நம்ப முடியாமல் இருக்கிறது. நான் சந்தோஷமாக, ஆச்சரியத்துடன் இருக்கிறேன். என்னை ஆசிரியர்கள் சரியான பாதையில் அழைத்து சென்றனர்” என்றார்

மாணவி திவ்யான்ஷிக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply