சாலையில் விழுந்த மரம்: களத்தில் இறங்கிய சென்னை இன்ஸ்பெக்டர்
சென்னை அண்ணாநகர் சாலையில் நேற்று பெய்த காற்றுடன் கூடிய மழையால் 6வது அவென்யூவில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் காவல்துறை இன்ஸ்பெக்டர் எம்.சரவணன் மற்றும் அவருடன் பணிபுரியும் காவல்துறையினர் மீட்புக்குழு வரும் வரை காத்திருக்காமல் அவர்களே மரத்தை வெட்டி சாலையை சரிசெய்தனர். வெட்டிய மரங்களை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அவருடைய குழுவினர்களே அப்புறப்படுத்தியதை கண்டு அந்த பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
பொதுமக்களுக்காக காவல்துறையினர்களே இறங்கி மீட்புப்பணியை கவனித்து போக்குவரத்தையும் சீர் செய்து இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் அவரது குழுவினர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வாழ்த்துக்கள் எம்.சரவணன் சார்….
Leave a Reply
You must be logged in to post a comment.