தல தோனி வழக்கத்திற்கு மாறாக இன்று அதிரடியாக ஒரு சில முடிவுகளை எடுத்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

டாஸ் வென்ற உடன் முதல் முதலாக பேட்டிங்கை தேர்வு செய்தார் தல தோனி அதுமட்டுமில்லாமல் டீபிளஸ்சிஸ் மற்றும் சாம் கர்ரன் ஆகிய இருவரையும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக இறக்கிவிட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது

21 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 31 ரன்கள் அடித்து அவுட் ஆனார் சாம் கர்ரன். அதன் பின்னர் வாட்சன் மற்றும் அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 42 மற்றும் 41 ரன்கள் எடுத்தனர்

இதனை அடுத்து சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியின் ஆரம்பத்திலேயே கேப்டன் வார்னர் விக்கெட்டை இழந்தது

அதன் பின்னர் வில்லியம்சன் கிட்டத்தட்ட போட்டியின் இறுதி வரை கொண்டு சென்றாலும் அவரும் 18 ஆவது ஓவரில் அவுட் ஆனதால் போட்டி சென்னையின் பக்கம் முழுக்க திரும்பியது

இறுதியில் ஐதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply