பரபரப்பு தகவல்

சாத்தான்குளம் தந்தை மகன் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த கிட்டத்தட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பதும் ஒரு சிலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக இன்று காலை செய்திகள் வெளிவந்தது இதனையடுத்து தற்போது அவர் புதுக்கோட்டை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அதேபோல் சாத்தான்குளம் புதிய டிஎஸ்பியாக கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

மேலும் ஏடிஎஸ்பி குமார் நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இந்த அதிரடி மாற்றம் காவல் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply