சாதி குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் தலைவர்
சாதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷி என்பவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கண்டிப்பு காரணமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா எம்.பி. உமாபாரதி, இந்து இயக்கவாதி சாத்வி ரிதம்பரா ஆகியோர் தாழ்ந்த சாதிகளை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு இந்து மதம் பற்றி ஒன்றும் தெரியாது. கற்றறிந்த பிராமணர்களுக்கு மட்டுமே இந்து மதம் பற்றி தெரியும்” என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சி.பி.ஜோஷி சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார்.
இவரது இந்த பேச்சு கரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை கண்டித்தார். இதனையடுத்து சி.பி. ஜோஷி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டு டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.